Visitors

31 January 2010

(நஸ்ருல் இஸ்லாமின்மொழிபெயர்ப்பு.)

சொல்லுசொல்லு பயமறியா சுத்த வீரனே!
நில்லு,உயரத் தலையைத் தூக்கி நில்லு தீரனே!

மன்னுமிய மலையும்நிமிர்ந் தென்னைப் பார்த்தது!
மமதை நீங்கி முடியை தாழ்த்தி மண்ணைப் பார்த்தது!-என்று(சொல்லு)

விண்ணின் விரிவில் ஏறிஏறி வீரித் துளைத்தேன்
வெண்மதி கதிர் மின்மினிகளை விட்டும் உயர்ந்தேன்!-என்று(சொல்லு)

அம்புவியின் அமரருலகின் அளவை மீறினேன்!
ஆண்டவனா ருலகினையும் தாண்டி ஏறினேன்!-என்று(சொல்லு)

எம்பிரானும் வியர்ந்தயர்ந்தார்; என்நுதல் மேலே
ஈச்வரனே வெற்றிகுறி யென்ன ஜொலித்தார்!- என்று(சொல்லு)

No comments:

Post a Comment