வேதா கமங்கள் சாத்திரங்கள்
...விள்ளுபு ராணங் கள் ஏதும்
ஓதா தவனோ ராதவன்யான்
...ஒன்றும் அறியா தவனானால்
காதால் நாவால் உன்னாமம்
...கேட்கச் சொல்ல இன்புறுவேன்!
போதா வோஇது புகல்வாயே
...போற்றிடு வோர்க்கருள் ராமக்ருஷ்ணா!....45.
திக்கும் தெரியா வனமேயோ?
...திசையொன் றறியா விரிகடலோ?
மக்கும் குப்பைக் கூளமதோ?
...மரணக் கிணறோ? மணற்காடோ?
ஒக்கும் வாழ்வில் வருந்தாமல்
...ஒண்தா மரையாம் உன்பாதம்
நக்கும் வண்டாய் நான்சுகிக்கும்
...நாளென் நாளோ? ராமக்ருஷ்ணா!....46.
10 years ago
No comments:
Post a Comment