ஒருநாய் பசியால் உழலும்வரை
...உணவதற் களிப்பது என்சமயம்
உறுநோய் கொண்டே வாடுபவர்க்
...குதவிகள் புரிவது என்சமயம்
அறியா மையிருள் அகன்றிடவே
...அறிவொளி காட்டுதல் என்சமயம்
தரித்திர நாரா யணசேவை
...தான்புரிந் தின்புறல் என்சமயம்!
நீயது நீயது எனதினமும்
...நெஞ்சிற் குரைத்தல் என்சமயம்
தீயது தேகம் தனைச்சுடினும்
...திகையா திருப்பது என்சமயம்
சேயது வெனத்தாய் காளியிடம்
...சிந்தைம கிழ்தல் என்சமயம்
தீயது நல்லது எனவு ணரா
...திவ்விய நிலையுறல் என்சமயம்!
07-04-1969
10 years ago
No comments:
Post a Comment