Visitors

26 January 2010

கும்பத் தனமே கோயிற்கருக்
...குழியே தெய்வம் எனஏங்கி
வெம்பத் தகுமோ விழலேனும்
...விரைகங் கைக்கரை சோலைசூழ்
உம்பர்ப் புகழும் பேலூரின்
...உயர்கோ புரமும் உள்ளுறையும்
அன்பர்க் கருளுன் னையும்கண்டே
...அகமகிழ் வேனோ ராமக்ருஷ்ணா!....43.

தைக்கும் விழியார் உறவிற்கும்
...தனத்தின் குவையைச் சேர்த்தற்கும்
கைக்கும் வாய்க்கும் உணவிற்கும்
...கவலைக் கொண்டு கடைசியிலே
பொய்க்கும் வாழ்க்கை இதுவென்று
...புலம்பும் படிக்குச் செய்யாமல்
மொய்க்கும் வண்டாய் உன்பாத
...மலருக்(கு) ஆக்கு ராமக்ருஷ்ணா!....44.

No comments:

Post a Comment