10 years ago
1 January 2010
வயிற்றில் சுமந்தாள் என்னன்னை
...வயதில் சுமந்தான் என்னப்பன்
பயிற்றும் ஆசான் நான்கல்வி
...பயிலும் போது எனைசுமந்தான்
தயிற்றில் வெண்ணெய் போன்றவனே
...தாயும் தந்தை குருவன்றி
உயிற்றின் முதல்வா எனைச்சுமக்கும்
...ஒருதெய் வமுநீ ராமக்ருஷ்ணா!....3
படிக்க இனிக்கும் உன்சரிதம்
...பார்க்க இனிக்கும் உன்னுருவம்
பிடிக்க இனிக்கும் உன்பாதம்
...பிதற்ற இனிக்கும் உன்னாமம்
நடிக்க இனிக்கும் உன்னிடத்தில்
...நயக்கும் பக்தன் போலவுமே
கடிக்க இனிக்கும் கரும்பெனவே
...கருத இனிக்கும் ராமக்ருஷ்ணா!....4
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment