Visitors

23 January 2010

வாக்கால் மனத்தால் காயத்தால்
...வசையொன் றில்லா படிவாழ்ந்து
நாக்கால் எப்போ தும்உன்றன்
...நாமம் சொல்லும் இன்பத்தின்
தாக்கால் மயக்கம் கொள்ளவருள்
...தீரந ரேந்திர நாதனையும்
ராக்கால் தனையும் எமக்களித்த
...ராஸ மணிமகிழ் ராமக்ருஷ்ணா!....39

ஏடை எடுக்கா தறிவுற்றாய்
...எளிமை தன்னில் இன்புற்றாய்!
கூடை கூடை யெனஅருளால்
...கூறிச் சென்ற உன்னுரையாம்
வாடை மலரைத் தள்ளிகரு
...வாடாம் புன்மொழி நுகருமெனைக்
காடைச் சேர்முன் காப்பாயே!
...கருணைத் தேவே ராமக்ருஷ்ணா!....40.

No comments:

Post a Comment