Visitors

18 January 2010

காசைக் காமம் தருசுகத்தை
...கருத்தில் சிறிதும் கொள்ளாமல்
தூசைப் போன்று தங்கமதைத்
...தொடவும் வெறுக்கும் இழிகுலத்து
வேசை யரையும் தேவியென
...வீழ்ந்தே பணியும் உனைப்போல
மாசை ஒழித்தார் மண்மேலும்
...விண்மே லுமிலை ராமக்ருஷ்ணா!....29.

பெண்ணின் பெருமை தனையுலகம்
...போற்றி யேத்தும் படியாக
அன்னைத் தூய சாரதையை
...ஆரா தித்துப் பணிந்தாயே!
எண்ணர்க் கரிய இச்செய்கை
...எவரே செய்ய வல்லார்கள்?
விண்ணின் நாட்டில் உள்ளவர்க்கும்
...வியப்பி துவாமே ராமக்ருஷ்ணா!....30.

No comments:

Post a Comment