உண்டே நாவை வயிறதனை
...ஓம்பிடு வார்கள் என்னகண்டார்?
பெண்டே பொருளே என உழன்று
...பெறுமின் பத்தை பெருங்காயம்
கொண்டே கடலில் கலக்கினதாய்
...குறையச் செய்யும் பேரின்பம்
உண்டே உன்றன் அருளமுதை
...உண்டார்க் கெல்லாம் ராமக்ருஷ்ணா!....35.
சஞ்சித மோடா காமியத்தை
...சற்றுமி லாமல் களைந்திடலாம்
எஞ்சிடும் பிராரர்த் தம் அதனை
...எவரும் வெல்லல் ஆகாதென்(று)
அஞ்சிடு கின்றேன் அந்தோநான்
...அய்யா உன்றன் அடிகீழே
கெஞ்சிடு கின்றேன் கொடுமையதைக்
...குலைத்திடு வாயே ராமக்ருஷ்ணா!....36.
10 years ago
No comments:
Post a Comment