Visitors

12 January 2010

அபிடேகம்:
------------------
தேன்கொண் டிளநீற் றினைகொண்டு
...தூய வெண்மை நிறங்கொண்ட
பான்கொண் டுள்ளம் குளிரச்செய்
...பன்னீர் பானகநீர் நந்நீர்
நான்கொண் டுந்தன் மேனியெலாம்
...நனையும் படிஅபிஷே கித்தேன்
வான்கொண் லலென அருள்பொழிவோய்!
...வந்தித் தேனுனை ராமக்ருஷ்ணா!....21.

நைவேத்தியம்:
---------------
பாலும் சருக்கரை நெய்யினையும்
...பதமாய்க் கலந்து பக்குவித்து
சாலும் இனிப்பின் வகையுணவும்
...சாதங் கல்பற் பலவகைகள்
மேலும் கனிகள் பானங்கள்
...மிகவே உந்தன் இசைவறிந்து
மூளும் அன்போ டளிக்கின்றேன்
...உண்டே அருளாய் ராமக்ருஷ்ணா!...22.

No comments:

Post a Comment