என்னை வளர்த்தல் தாயின்கடன்
...இசைவாய் காத்தல் தந்தைக்கடன்
பின்னைக் கல்வி போதித்தல்
...பேரா சிரியன் கடனாகும்!
முன்னை இவர்கள் செய்தகடன்
...முற்றும் பெற்றும் என்னபயன்?
உன்னைச் சாரும் கடனென்று
...நீஆ ளாக்கால் ராமக்ருஷ்ணா!....25.
மாயம் ஆகும் உலகென்றும்
...மனைவி மக்கள் பொய்யென்றும்
ஓயும் காலம் வரும்போது
...ஒருவரும் உதவார் எனத்தெரிந்தும்
தீயின் தழலைத் தலைக்கொண்டோன்
...துடித்தல் போலே உனைக்காண
நாயேன் துயரம் கொண்டறியேன்
...நாதா! அருள்ஸ்ரீ ராமக்ருஷ்ணா!....26.
10 years ago
No comments:
Post a Comment