சமயம் யாவும் ஒருவனையே
...சாறும் வகையைக் காட்டிடவே
அமையும் பலவாம் பாதைஎனும்
...அவ்வுண் மையிவ் வுலகுணர
குமையும் துன்பம் பலபட்டு
...கூறும் நெறிகள் பலகண்டாய்
தமையும் தன்பொருள் ஆவியையும்
...தரணிக் களித்த ராமக்ருஷ்ணா!....41.
நீரும் நிலமும் தீகாற்றும்
...நீளா காசம் இவைபிணைந்தே
நேரும் தேக பந்தத்தால்
...நானுன் உறவைப் பிரிந்துற்ற
பேரும் வடிவும் கொள்பேத
...பிரபஞ் சத்தை விட்டுன்னை
சேரும் படிசெய் வாயேசத்
...சித்தா நந்தா ராமக்ருஷ்ணா!....42.
11 years ago

No comments:
Post a Comment