Visitors

9 January 2010

காமிய பக்தி அன்றிஎதும்
...கருதா பக்தி செய்ததிலை
பூமியைப் பொன்னைப் புலனைந்தைப்
...பேணா திருக்கும் துறவில்லை
சேமித் திடுநற் கருமம்செய
...சிறியே .னுக்குச் சிந்தையிலை
சாமியென் றுனைச்சர ணடைவதலால்
...செயலொன் றில்லை ராமக்ருஷ்ணா!....13.

ஒருவன் இன்புற் றிருக்கத்துயர்
...ஒருவன் அடைந்து வருத்தமுற
ஒருவன் நீதான் காரணமென்
...றுரைப்பார் வசைபல மொழிந்திடுவார்
விருப்பால் வெருப்பால் வேற்றுமைசெய்
...வேந்தன் என உனை வருணிப்பார்
கருமம் மூன்றின் காரணத்தை
...கருதா தாரே ராமக்ருஷ்ணா!....14.

No comments:

Post a Comment