எங்கே வில்லும் வேய்ங்குழலும்
...ஏற்றின் நடையும், இன்னிசையும்?
எங்கே தலைமேல் மணிமுடியும்
...எழில்செய் மயிலின் தோகையதும்?
எங்கே காதின் குண்டலங்கள்?
...இசைக்கும் மணியின் ஆரமெங்கே?
இங்கெ இவற்றை ஒளித்துவந்தாய்
...ஏனோ உரையாய் ராமக்ருஷ்ணா!....11.
நோயால் வாடும் எந்தனுக்கு
...நல்ல வைத்திய நாதன்நீ!
வாயால் உரைக்கும் உன்னாமம்
...வாய்த்த அம்மந் திரம்மருந்தாம்!
ஓயா துலகோர் தரும்மருந்தை
...உட்கொள் ளாது விடுத்தேனே
மாயா தேவீ சாரதையின்
...மணவா ளாஸ்ரீ ராமக்ருஷ்ணா!....12.
10 years ago
No comments:
Post a Comment