Visitors

22 January 2010

கஞ்ச மலரே நீயென்றால்
...கரிய வண்டே நானாகும்;
கொஞ்சும் அன்னை நீயென்றால்
...குலவும் குழந்தை நானாகும்;
விஞ்சும் மேகம் நீயென்றால்
...விளையும் பயிரே நானாகும்;
தஞ்சம் அளிப்போன் நீயென்றால்
...தாஸன் நானே ராமக்ருஷ்ணா!....37.

முலையுட் படுபால் தருதாயின்
...மேலாம் அன்பாம் நீவிரித்த
வலையுட் படுதல்; கொடுநாக
...வெங்கடி யுண்டார் பிழையாராம்;
சுளையுட் கொளுமோர் தீங்கனியின்
...சுவையே! பவதா ரிணித்தாயை
சிலையுட் பட்டெழச் செய்தவனே!
...சுகத்தின் உருவே!ராமக்ருஷ்ணா!....38.

No comments:

Post a Comment