கண்டீ ராநீர் கடவுளையே
...கண்ணால்? எனவே கேட்டநரேன்
பண்டோர் நாளில் அறியுவணம்
..."பார்த்தேன் பார்க்கின் றேன்பார்ப்பேன்
உண்டாம் இறைவன் அவனோடு
...உறவும் கொள்ளல் ஆகுமென
விண்டாய் உறுதி; இன்றெனக்கும்
...உரையாய் அதுபோல் ராமக்ருஷ்ணா!....31.
பொய்யேன் பக்தி நடிப்பென்று
...புவியில் உள்ளோர் அறியாமல்
மெய்யாய் உன்னைப் போற்றுகிறேன்
...மேலும் நீதான் எனக்கு அருள்
செய்யா திருப்ப தென்னவென
...சேர்ந்தே உன்னை ஏசுகிறார்
அய்யா அவர்கள் நாணிடவே
...அருள்செய் கண்டாய் ராமக்ருஷ்ணா!....32.
11 years ago

No comments:
Post a Comment