9 years ago
4 January 2010
சாவென் பதுவும் சஞ்சலமாம்
...சனனம் என்பது வும்துயராம்
யாவும் பிறப்பு இறப்பென்னும்
...இருமை வெல்லல் ஆகாது
நாவும் நெஞ்சும் நிறைவாக
...நாதன் உன்றன் நாமத்தை
கூவும் அடியா ரால்மட்டும்
...கூடும் வெல்லல் ராமக்ருஷ்ணா!....9.
பொருப்பின் மேலே உறைவோரும்
...புதர்க்கொள் வனத்தில் வசிப்போரும்
நெருப்பை நீரை ஒன்றெனவே
...நினைத்துத் தவங்கள் புரிந்தெதிலும்
விருப்பை வெறுப்பை அழித்தவரும்
...விழியால் உன்னைக் காணாருன்
சிறப்பைப் போற்றும் அடியாரே
...சிறக்கக் காண்பார் ராமக்ருஷ்ணா!....10.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment