Visitors

10 January 2010

கற்கும் கலைகளின் கருத்தாநீ!
...கருவின் உயிர்க்குக் காரணம்நீ!
சொற்கள் பலவின் பொருளும்நீ!
...சொல்லொண் ணாத பொருளும்நீ!
தெற்கும் வடக்கும் திசையெங்கும்
...திகழும் தேசோ மயமும்நீ!
பற்றொன் றில்லா பரமன்நீ!
...பாரின் முதல்நீ ராமக்ருஷ்ணா!....15.

மலரில் தேங்கும் மதுவும்நீ!
...மாந்திட மயங்கும் வண்டும்நீ!
புலரும் போதின் பகலவன்நீ!
...போதைப் பிரிக்கும் பதுமம்நீ!
அலறும் குழந்தை அதுவும்நீ!
...அணைக்கும் அன்னை அவளும்நீ!
சொலரும் சத்சித் சுகமும்நீ!
...சொலும்நான் மறைநீ ராமக்ருஷ்ணா!....16.

No comments:

Post a Comment