Visitors

2 January 2010


புளியின் சுவையும் காரத்தின்
...புன்மைச் சுவையும் தீஞ்சுவையும்
களித்தே இவ்வேழ் சுவையருந்திக்
...கடையேன் நாவை வளர்ப்பதலால்
வெளியும் உள்ளும் நிறைந்தவனே
...விமலா! உலகை உண்டாக்கி
அளிப்போய் அழிப்போய் எனநாவில்
...அரற்றிச் சுவைக்கேன் ராமக்ருஷ்ணா!....5.

அன்பால் உலகை ஆண்டவனே!
...ஆண்பால் பெண்பால் பலவின்பால்
துன்பால் எவையும் வாடிடவும்
...துடைக்க தாவும் கருணையினால்
என்பால் தசையால் உயிரதனால்
...எவர்க்கும் உடைமை ஆகினையே!
பொன்பால் பெண்பால் போயுழலும்
...புலையேன் எனையாள் ராமக்ருஷ்ணா!....6.

No comments:

Post a Comment