Visitors

24 January 2010

கல்மனம் உருகிடுமா?

ராகம்- காபி.
-----------

பல்லவி.
--------
கல்மனம் உருகிடுமா?-- எந்தன்
கதாதரா உந்தன் பதாரவிந்த மெண்ணி(கல்)

அனுபல்லவி.
-----------
சொல்மனம் செயலெல்லாம் சேர்ந்திடுமா?-- பரா
சக்தி மகனே உன்மேல் பக்தியேற்படுமா?(கல்)

சரணம்
-------
சாம முதல் வேதம் கற்றறியேனே!
சத்துவ குண நலம் அற்ற வெறியேனே!
தேமதுர சுவைசேர் ராமகிருஷ்ணா உன்பேர்
தினம்தினம் சொல்லிசொல்லி அனல்மெழு கெனவே என்(கல்)
-----------

No comments:

Post a Comment