Visitors

11 January 2010

சந்திர னின்குளி ரொளியும்நீ!
...சூரிய னின்வெங் கதிரும்நீ!
இந்திர போகத் தின்பம்நீ!
...ஏழையின் ஏக்கத் துன்பமும்நீ!
மந்திர வேதப் பொருளும்நீ!
...மழலை மொழியின் பொருளும்நீ!
தந்திரம் யாவும் செய்பவன்நீ!
...தனியேன் துணைநீ ராமக்ருஷ்ணா!....17.

நீராட்டல்!
===========
கங்கை நீரில் காவிரித்தாய்
...தரும்தண் ணீரில் நருமதையின்
பொங்கும் பிரம புத்திரையின்
...புனலில் வேறு புவியிலுள
தங்கும் புனிதம் உறுநதிகள்
...தரும்சலத் தாலே தலைவாஉன்
அங்கம் குளிர சொரிந்தேநீர்
...ஆட்டிம கிழ்வேன் ராமக்ருஷ்ணா!....18.

No comments:

Post a Comment