Visitors

17 January 2010

பஞ்ச வடியின் அடியிருந்து
...பகரொண் ணாத தவம்புரிந்தாய்!
எஞ்சும் படிக்கு ஏதுமிலா
...இறையின் காட்சி பலகண்டாய்!
மிஞ்சும் கொடுமை யதனாலே
...மேன்மைத் தாழும் உலகினுக்குத்
தஞ்சம் அளிக்க வெனத்தாளா
...தாயின் தயையால் ராமக்ருஷ்ணா!....27.

தாயின் அன்பைக் கடுகவின்
...தன்மை யாக்கும் உன்னன்பு
பேயின் தன்மைக் கொண்டவர்க்கும்
...பெருநெறி யளிக்கும் உன்னன்பு
சீயின் பாற்படு புழுவினையும்
...சேர அனைக்கும் உன்னன்பு
நாயின் பான்மைக் கொளெனையும்
...நயக்கும் அன்பா ராமக்ருஷ்ணா!....28.

No comments:

Post a Comment