Visitors

13 January 2010

அருள்கனித் தருவே!

சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாளில், சிவாம்ருதம் எழுதிய கீர்த்தனை விவேகானந்தர் பாதங்களில் சமர்ப்பிக்கப் படுகிறது!

பல்லவி.
---------
நாதா உன்புகழ் நவில்வோமே--எந்த
நாளும் விவேகா நந்த நரேந்திர(நாதா)

அனுபல்லவி.
-----------
மாதாசாரதா குரு மஹராஜர்புதல்வா
மருள்நீக்கும் உருவே! அருள்கனித் தருவே!(நாதா)

சரணம்-- 1.
------------
பாலப் பருவம் முதல் பரகதிக்(கு)உருகினாய்
...பரமஹம்ஸ மலர்ப் பாதத்தேன் பருகினாய்!
கோலகமலக் கண்கள் காட்டிஅவரைக் கொண்டாய்!
...குருசோதரர்களைக் கூட்டி சங்கம் கொண்டாய்!(நாதா)

சரணம்-2.
-----------
தனியே பாரதத் தரைமிசை நடந்தாய்!
...தயையால் உருகியுன் இதயமும் உடைந்தாய்!
முனியே கடல்தாண்டி மேற்றிசையும் அடைந்தாய்!
...மூளும் உன்கருணையில் யாரையும் கடந்தாய்!(நாதா)

சரணம்--3.
--------------
நடைமுறை வேதாந்தம் நாடெங்கும் உரைத்தாய்!
...நற்றேன்மொழி பகர்ந்தே நன்மை எங்கும்நிறைத்தாய்!
தடை பலவும் தவிர்த்தே தருமப் பயிர் வளர்த்தாய்!
...தவ யோகியர்க் கரசாய் தரணியை வலம் வந்தாய்!(நாதா)

சரணம்-4.
-----------
செயல் ஞானம் பக்தி பயில்யோகம்யாவும்
...சேர்ந்த திருவடிவே சுந்தரனே இங்கு
துயிலும் பாரதத்தைத் துடித்தெழச் செய்தவனே!
...துரியம் துறந்து எங்கள் துயர்த் துடைக்க வந்த(நாதா)

No comments:

Post a Comment