காளித் தாயின் பதம்பிடித்தாய்
...கண்ணன் மீதில் காதல்கொண்டாய்
தோளின் வலியுடை அனுமனெனத்
...தசரத ராமனைப் பூசித்தாய்!
நாள்,இடம் எனுமிவை நழுவியுயர்
...நான்மறை யுரைக்கும் நிலையுணர்ந்தாய்
தாளினில், கரத்தில் ஆப்புண்டோன்
தனை,நபி யையும்பணி ராமக்ருஷ்ணா!....23.
தங்கைத் தம்பித் தாய்தந்தை
...தமரும் மற்றை யுற்றவரும்
சங்கை யின்றி சந்தைநேர்
...சனத்தின் கூட்டம் கணக்கூட்டம்
மங்கைத் தூய சாரதையின்
...மணவா! உந்தன் அடியார்கள்
தங்கைக் கொட்டிப் புகழ்க்கூட்டம்
...திருக்கூட் டம்ஸ்ரீ ராமக்ருஷ்ணா!....24.
10 years ago
No comments:
Post a Comment