Visitors

3 January 2010

சத்தியப் பாதைச் செல்வோர்கள்
...ஜயமே அடைவார் தோல்வியுறார்
நித்திய வாழ்வைப் பெற அதுவே
...நேர்வழி என்வே வேதங்கள்
ஒத்தியம் பிடுதல் அறிந்தாலும்
...ஒன்றும் புரிய அறியேனே!
அத்தகை வாழ்க்கை வாழ்ந்திடவே
...அடியே நுக்கருள் ராமக்ருஷ்ணா!....7.

பிரமச் சரிய நன்னெறியை
...பத்தீ ராண்டும் மேற்கொண்டால்
பிரம ஞானம் அடைந்திடுதல்
...பிறகே எளிதாம் என உரைத்தாய்
பிரமன் படைத்த பெண்ணினத்தை
...பரதே வியெனப் போற்றவருள்
பிரமன் என்ற நிலைமாறி
...பிறந்திங் குற்ற ராமக்ருஷ்ணா!....8.

பி.கு. 7 --ஆம் பாடலில்,மூன்றாவது அடியின் ஐந்தாம் சீரில் 'புரிய' என்னும் சொல்லுக்கு,--'ட்டு டு ப்ராக்டிகலி' என்று ஆங்கிலத்தில் அமரர் சிவாமிருதம் குறிப்பு கொடுத்துள்ளார்.

No comments:

Post a Comment