பாழின் இருளோ படுகுழியோ?
...பஞ்சம் சூழ்ந்த பட்டிணமோ?
ஊழின் காலத் துண்டாகும்
...உலகின் நிலையோ புவிவாழ்வு?
யாழின் இசையும் இழிவாக
...இசைக்கும் நாமக தாதரனே!
தாழின் அருளால் தடுத்தாளும்
...தினமெத் தினமோ? ராமக்ருஷ்ணா!....47.
கொங்கை மாதர் கண்ணழகும்
...கொண்டை யழகும் குறுநகையின்
அங்கை யழகும் தொடையழகும்
...அழிக்கும் அழகாம் அழியழகாம்
கங்கைக் கரைபே லூரில் உறை
...கண்ணே உன்றன் கட்டழகும்
செங்கை அபயம் செய்யழகும்
...செழிக்கும் அழகாம் ராமக்ருஷ்ணா!....48.
11 years ago

No comments:
Post a Comment