10 years ago
31 December 2009
அமுதப் பாடல்கள்!
உள்ளம் குழைய ஊனுருக
...உன்னா மத்தை மிகச்சொல்லி
வெள்ளம் என உன் னிடமன்பு
...வெறிபோற் கொள்ளா துலகத்தில்
கள்ளம் கொண்ட மனவாக்கு
...காயம் இவற்றால் கடுநரகப்
பள்ளம் விழுவேன் தனைக்காப்பாய்
...பரம ஹம்ஸ ராமக்ருஷ்ணா!....1.
அழுதேன் பலகால் உன்முன்னே
...அரசே நீயும் அறியாயா?
தொழுதேன் உன்னைத் தொண்டன்யான்
...துரையே நீயும் தெரியாயா?
மொழிந்தேன் குறையை தீந்தமிழில்
...மணியே உனக்குப் புரியாதா?
விழலேன் வேறு என்செய்வேன்
...விள்ளாய் முத்து ராமக்ருஷ்ணா!....2.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment