Visitors

26 February 2010

தூய அன்னைத் துணைவா வா
...தோன்றித் தோன்றா ஒன்றே வா
நேயம் காட்டும் நண்பா வா
...நிலையில் உலகின் நிலையே வா
மாயப் பிணிக்கோர் மருந்தே வா
...மருந்தைக் குழைக்கும் தேனே வா
நாயே னுக்கெஜ மானே வா
...நயப்போர்க் கருளும் ராமக்ருஷ்ணா!....61.

தாகம் தவிர்க்கும் தலைவா வா
...தனியே னெனக்குத் துணையே வா
சோகம் தவிர்க்கும் சுகமே வா
...சூதை யொழிக்கும் சுகிர்தா வா
போகம் கொடுக்கும் புனிதா வா
...பிறப்பை யறுக்கும் பெயரா வா
தேகம் கொண்டே தோன்றிட வா
...தேவா வாவா! ராமக்ருஷ்ணா!....62.

No comments:

Post a Comment