Visitors

16 February 2010

யாரும் அருளார் எனத்தேர்ந்தே
...இறைவா உன்றன் அடிசேர்ந்தேன்
நீரும் என்னை வெறுத்துன்றன்
...நேசம் தாரா யெனின்,"இங்கே
பாரும்! பாரும்! அடியார்க்கும்
...பரியா பரம ஹம்ஸனிவன்!
யாரும் அறிவீர்!!" எனக்கூறி
...இரைவேன் அறிவாய் ராமக்ருஷ்ணா!....57.

அட்ட சித்திகள் பெற்றிருந்தும்
...அறியான் போல இருக்கின்றாய்!
முட்ட ஞானம் பலவறிந்தும்
...முட்டாள் போல நடிக்கின்றாய்!
பட்டத் துயரால் பதறுமனைப்
...பார்க்கத் திருவருள் மறுக்கின்றாய்!
பிட்ட மோதகப் பூரணமாய்ப்
...புசிப்போர்க் கினிக்கும் ராமக்ருஷ்ணா!....58.

No comments:

Post a Comment