Visitors

17 February 2010

கோதண் டமெனும் வில்லெங்கே?
...குலவும் புல்லாங் குழலெங்கே?
மோதும் வானர சேனையெங்கே?
...மோகங் கொள்கோ பியரெங்கே?
யாதும் வெல்லும் வீரமெங்கே?
...யாதவ ரிடைசெய் மாயமெங்கே?
ஓதும் மகிமை யெதும்மறைத்திங்
...குற்றதெ தற்கோ? ராமகிருஷ்ணா!....59.

தொல்லை ஏற்றும் தன்சேயின்
...துன்பம் துடைப்பார் தன்முலையில்
பல்லை ஏற்றும் பால்கொடுப்பாள்
...பாசம் கொண்ட நற்றாயும்
நெல்லை யகன்ற உமிபோல
...நின்னை யகன்ற எனக்குமருள்
இல்லை யென்னா தளிப்பாயோ?
...என் தா யேஸ்ரீ ராமகிருஷ்ணா!....60.

2 comments:

  1. உடல்நிலை குன்றிய நிலையிலும் உயர்ந்த சிந்தனை, மெதுவா வந்து தான் படிக்கணும், நிஜமாகவே அறிவுக்கனலும், அருட்புனலும் இங்கே பொங்கிப் பிரவாகம் எடுத்திருக்கு. மெய் சிலிர்க்கிறது.

    ReplyDelete