மொழியின் செல்வந ரேந்திரனை
...முன்னே காணும் போதெல்லாம்
கழிப்பே றுவகைக் கொண்டாயே
...கமலக் கண்ணன் அவனில்லா
தொழிந்தால் ஒருநொடி யும்தாளா
...துயரால் உன்றன் இதயத்தைப்
பிழிந்தால் என்னத் துடித்தாயே
...பேலூர் வாசா ராமக்ருஷ்ணா!....53.
தன்னை மறந்து தரணிக்காய்த்
...தவங்கள் பலசெய் தவைகளெலாம்
என்னை எத்தன் மைத்தெனவே
...எவர்க்கும் தெரியும் படிஎளிதாய்
சொன்னை சொற்கள் அவையாவும்
...சொட்டும் தேனோ அமுதாமோ
அன்னைக் குழவிக் களிக்கும்முலை
...அதன்பா லாமோ ராமக்ருஷ்ணா!....54.
10 years ago
No comments:
Post a Comment