Visitors

13 February 2010

வாடும் பிணியா ளரைக்கண்டும்
...வளைந்தே கூனிக் கோலொன்றை
நாடும் முதுமை நிலைக்கண்டும்
...நால்வர் மேலே பிணமாகக்
காடுக் கேகும் காட்சியினைக்
...கண்ட புத்தன் போலவுமே
பீடை யுலகை விட்டுன்னை
...போற்றுவ தென்றோ ராமக்ருஷ்ணா!....51.

கெட்டே தேகம் நோவாகிக்
...குலையக் கண்டும் அதன்பற்றை
விட்டேன் அல்லேன் விதவிதமாய்
...ஓம்பிடு தற்கே முயலுகிறேன்
முட்டா ளான நானென்றுன்
...முளறிப் பாதம் நாடுவெனோ
தட்டா திந்தத் தனியேனைத்
...தடுத்தாட் கொள்வாய் ராமக்ருஷ்ணா!....52.

No comments:

Post a Comment