Visitors

24 February 2010

மூவகை அடியார்

படுத்திருந்தாள் ரபியாளும் நோயால்வாடி
...பார்த்துசெல அவளருகில் இருவர்வந்தார்
அடுத்தமுசல் மான்கள்புகழ் புனிதமாலிக்
...அறிவாளர் ஹாஸனென்ப தவர்கள் பேராம்.

"இறையவனார் தருந்துன்பம் எதுவா.னாலும்
...ஏற்றுமனம் பொறுத்தநலம் "என்றார்ஹாஸன்
"பொறையதிலும் அழகாகும் அடியாரென்றால்
...புன்மைகண்டும் புன்னகைத்தல்" என்றார்மாலிக்.

பின்னவரின் பக்தியிலும் அகந்தைக்கண்டு
...பெண்ரபியாள் "பெரியோரே! நீங்கள்சொன்ன
அன்னவர்க்கும் மேலானோர் அவனைக்கண்டு
...அடைந்ததுயர் மறந்துநிற்கும் அடியார்"என்றாள்.

No comments:

Post a Comment