Visitors

15 February 2010

அருள்செய் இல்லா விடிலென்னை
...அழிந்தே போகச் செய்;சற்றும்
பொருள்செய் இல்லா விடிலென்னை
...பிணம்செய்; பிறக்கச் செய்கரிய
இருள்செய் மாயம் ஒழியிலையேல்
...இறக்கச் செய்வாய்; அசுரர்க்கும்
மருள்செய் பவதா ரிணிமகிழும்
...மைந்தா முத்து ராமக்ருஷ்ணா!....55.

சொல்லும் எந்தன் குறையெல்லாம்
...செவிகே ளாயோ என்செய்வேன்
அல்லும் பகலும் படுதுன்பம்
...அதைக்கண் பாரா யோஎன்முன்
கொல்லும் காலன் உருவன்றி
...குளிரும் உன்றன் உருவைநான்
செல்லும் நாளில் காண்பேனோ?
...செல்வா முத்து ராமக்ருஷ்ணா!.....56.

No comments:

Post a Comment