Visitors

24 March 2010

காமார்ப் பதியின் கனியேவா!
...கன்னியர் மயங்கும் கண்ணாவா!
மாமா யங்கள் புரிந்தோய்வா!
...மாசொன் றில்லா மணியேவா!
தூமா மலரின் பாதாவா!
...தூய அன்னைத் துணைவாவா!
ஏமாற் றாமல் என்முன்னே
...இன்றே வாவா ராமகிருஷ்ணா!....79.

ஈங்கார் எனைப்போல் பாவியர்கள்
...இறைவா உன்றன் அருள்வேண்டி
ஏங்கார் எல்லாம் இழிகுலத்தோர்!
...என்றே கேட்டும் இசையாஎன்
தீங்கார் உள்ளம் திருந்திடவும்
...திரும்பும் பிறவி யொழிந்திடவும்
ஓங்கா ரத்தின் உட்பொருளே!
...ஒருசிறி தருள்வாய்! ராமகிருஷ்ணா!....80.

No comments:

Post a Comment