விடையின் மேலமர் வித்தகனாம்!
...விடம்கொள் கண்ட சிவன்நீயோ?
தடையில் கருணைச் செய்பவனாம்
...திருவை மார்பில் கொள்மாலோ?
குடைந்தே அவனுந் தியில்பிறந்த
...குயவன் எனும்பிரம் மாதானோ?
விடையில் மருமம் ஆனவனே!
...விள்ளாய் நீயார்? ராமகிருஷ்ணா!....77.
நீசன் நின்னடி யான்போன்று
...நடிக்கும் கசடன் நின்னடிக்குத்
தாஸன் போன்றும் நடித்துன்மேல்
...துதிகள் பாடி ஆடிமிக
நேசன் போன்றும் நடிக்குமென்றன்
...நடிப்பை யெல்லாம் நிஜமாக்கு!
ஈசன் எனினும் ஏழையென
...இங்கே நடிக்கும் ராமகிருஷ்ணா!....78.
11 years ago

No comments:
Post a Comment