Visitors

17 March 2010

நோவைக் காணா உடலைத்தா!
...நோன்பை நோற்கும் திறனைத்தா!
பாவை உன்மேல் பலநூறு
...படைக்கும் பாண்டித் தியமும்தா!
சாவை அஞ்சாத் தகைமைத்தா!
...சற்குரு நாதா மலர்ப்பாதா!
நீவைத் திடுதா வினில்மகிழும்
...நினைவைத் தாராய் ராமக்ருஷ்ணா!....73.

அன்புற் றோர்க்கே அருகோனே!
...அசடர்க் கெல்லாம் அரியோனே!
துன்புற் றோர்க்குத் துணைவோனே!
...துயில்வோர்க் கெல்லாம் துலைவோனே!
நண்புற் றோரை நயப்போனே!
...நாடா தாரை நசிப்போனே!
என்புற் றேலெனும் உடலெடுத்த
...எளியோ னேயென் ராமகிருஷ்ண!....74.

No comments:

Post a Comment