Visitors

15 March 2010

நக்கும் எலும்பின் சுவையறியும்
...நாய்க்கும் நகையே தோன்றிடவே
மக்கும் மறையும் வாழ்வினிடை
...மறையாப் பொருளைத் தேடுகிறேன்
கொக்கும் பிடிபடும் தலைவெண்ணெய்
...குழைந்தால் என்றிடும் மூடன்யான்
மிக்கும் புகழுடை பேலூரின்
...மிசைவாழ் வோனே ராமகிருஷ்ணா!....71.

சேவைச் செய்யும் இதயம்தா!
...சேரும் அன்பும் அறிவும்தா!
பாவை யரைஎல் லாம்மாதா
...பரதே வியெனும் பான்மைத்தா!
நாவைக் கண்ணைச் செவிமெய்யை
...நாசியை வென்றிடும் தீரம்தா!
பூவைக் கொண்டுனை பூசிக்கும்
...பேரைத் தாராய் ராமகிருஷ்ணா!....72.

No comments:

Post a Comment