Visitors

6 March 2010

பாடியும் ஆடியும் பதறியுடல்
...பாகாய் உருகுவைச் சிலபோதில்
கூடிடும் பிரம ஞானத்தில்
...கிடப்பாய் மூழ்கி சிலபோதில்
நாடிடும் பக்தர் நற்றவத்து
...ஞானியர் இவரிரு வரும்சேரா
கோடிய ரெனுமதைப் பொய்செய்தாய்
...குருமஹ ராஜா ராமகிருஷ்ணா!....67.

கோடியர்=extreme

வாளைத் தாவும் வயல்சூழும்
...வானோர் புகழ்கா மார்ப்பதியில்
நாளைத் தாவச் செய்கதிரோன்
...நேரும் படியவ தரித்தவனே!
வாளைத் தாவி எடுக்கையிலே
...வடிவோ டன்னையைக் கண்டவனே!
தாளைத் தாவிப் பற்றுமெனைத்
...தள்ளா தேஸ்ரீ ராமகிருஷ்ணா!....68.

No comments:

Post a Comment