Visitors

12 March 2010

குருமஹராஜா!

குருமஹராஜா!
---------------

பல்லவி.
------
குருமஹராஜா குருமஹராஜா
திருவருள் புரியும் கருணா சாகர (குரு)

அனுபல்லவி.
----------
மருவில் அன்னை சாரதை மனம்மகிழ் நாதா
மனித வடிவில் வந்த மறை த்தேடும் பாதா (குரு)

சரணம்.1.
-------
துன்பமும் இன்பமும் இங்கெனை வாட்டுதே
..இருவினைப் பயன்கள் இவ்விகத்தினில் கூட்டுதே
அன்பனே உன்நினைவு ஆனந்தம் ஊட்டுதே
..அற்பனுக் குன்னருள் உண்டெனக் காட்டுதே! (குரு)
சரணம்.2.
----------
சங்கு சக்கரமின்றி சாதாரணமாய் வந்தாய்
..சகல உயிர்க்கும் அன்பே செய்யமிக உவந்தாய்
மங்கும் தருமம் ஓங்க இங்குபிறந்த எந்தாய்!
..மைந்தன் நரேந்திரனை இம்மண்ணுலகிற்குத் தந்தாய்! (குரு)

*****************************

No comments:

Post a Comment