Visitors

19 March 2010

நகமும் சிகையும் அகலுவதால்
...நானுறு துன்ப மொன்றுமிலை
முகமும் உடலும் சேர்தேகம்
...முடிந்தே அழியும் நாள்மட்டும்
அகமும் உயிரும் குலைகின்றார்
...அதிசயம் இதுவாம் சத்சித்து
சுகமும் ஆனாய் உனைப்பணிந்தேன்
...சோர்வொழிப் பாயே ராமகிருஷ்ணா!....75.

உள்ளத் துறைவோன் நீயானால்
...உணரும் படிவா ராததுஏன்?
உள்ளத் தோன்றா பிரமமென்றால்
...உடலைத் தாங்கி வந்ததுமேன்?
உள்ளப் பொருளே! அருளமுதே!
...உரைக்கும் கடந்த உன்னதனே!
உள்ளன் இலனெனும் பான்மைகொள்
...உலகின் முதல்வா! ராமகிருஷ்ணா!....76.

No comments:

Post a Comment