Visitors

4 March 2010

கடியா ரத்தைப் போல்தினமும்
...கணக்காய்ச் சுழலும் வாழ்நாளில்
படியா பாடம் பலகற்றேன்
...பதரைப் போன்றோர்; பரமெண்ணித்
துடியா மாக்கள் துணையன்றி
...தூயா உன்னைத் துதிபாடும்
அடியா ரிணக்கம் அதுஅருள்வாய்!
...அம்மே! அப்பா! ராமக்ருஷ்ணா!....65.

வசிக்கும் வீட்டை காத்திடும் ஓர்
...வாயுண விற்கும் நாய்; உட்கொள்
மசிக்கும் எழுதும் வரைகோலும்;
...மதியமும் இரவும் வயிறார
புசிக்கும் உணவிற் கீடாக
...புவிக்கென் செய்தேன் ஈடாக?
சசிக்கும் கங்கா விற்கும்தலை
...சடையில் இடந்தரும் ராமக்ருஷ்ணா!....66.

No comments:

Post a Comment