Visitors

31 May 2010

கதாதர அகவல்

உண்டின்பம் எனவேநான் ஓடிக் களைத்தேனுன்
தொண்டின்பம் காணவருள் துரையே கதாதரனே!

பொய்யாக உன்பக்தன் போல நடித்தேனே
மெய்த்தொண்டன் ஆகஎனை மாற்றாய் கதாதரனே!

யந்திரிநீ!உன்கையில் யந்திரம்நான் என இருக்க
தந்திரம்நீ ஒன்றுசொல்லாய் தயவாய் கதாதரனே!

என்ன துன்பம் உற்றாலும் அல்லதின்பம் உற்றாலும்
உன்னை மறவா திருக்குமுளம்தா கதாதரனே!

ஒருத்திக்கு ஒருகணவன் ஒன்பது பேருண்டோஎன்
கருத்தினிலே கற்பருளென் கணவா கதாதரனே!

No comments:

Post a Comment