9 years ago
27 May 2010
கண்ணா!குழல் ஊது!
கோபியர்க் கருள குழலெடுத் துமிக
சோபிதம் கொளும் கீதம் ஊதினாய்!
மாபிழைப் புரியெமக்(கு) இன்றருள
நீபிடித்து குழல் ஊது கண்ணனே!...1
இன்பமேற் படும் இசையிலா யினும்
துன்பமாம் பிறவி தன்னைநீக் கிபே
ரின்பமேற் படும் இசைஉன தன்றோ?
அன்பனே! ஊது ஆயர்கண் ணனே!....2
கண்ணதே உயர் கரணமாம் என
எண்ணிடல் பிழை என்றுணர்கிறேன்
பண்ணிசைக் குழல் பருகும்செவி களே
முன்னதற் கும்மே லானதே கண்ணா!....3
பாலையில் கண்ட பருகும்நீரைப் போல்
வேலைசூழ் உலக வேதனை விடாய்
கோலகீத முன் குழலிசைத் திடும்
வேளைதீரு மே வேணுகோபா லனே!...4
பெண்ணினாசை யால் பேதலிப் பவர்
மண்ணினாசை யால் மதிமயங் குவோர்
பொன்னினாசை யால் புலம்பு வோ ரல்லால்
அண்ணலே!உன் பால் ஆசைக்கொள் கிலார்?....5
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment