Visitors

4 June 2010

கூறின் ஆறே சமுசாரம்
...கூடும் அக்கரை யதுபிரம்மம்
வேறென் றிக்கரை இருந்தந்த
...வெம்மா யைநதிக் கடந்திடுமத்
தீரன் அவனே ஜீவாத்மா;
...தோன்றும் வழிகள் நாலாகும்
நீரின்மேல் நடப்பது யோகம்
...நீந்திக் கடப்பது கருமமதாம்
யாரின் உதவியும் வேண்டாம்
...எகிறித் தாண்டல் ஞானமெனில்
பாரின் மக்கள் பலர்செல்லும்
...பாலம் ஆகும் பக்தியதே!

(7- 5- 67.)


கருத்து.
-----------
ஆறு=சம்சாரம்
அக்கரை=பரப்பிரம்மம்
கடப்பவன்=ஜீவாத்துமா

நீரில் நடந்து கடப்பது=யோகநெறி
நீந்திக் கடப்பது=கரும நெறி
தாண்டிக் கடப்பது=ஞானநெறி
பாலத்தின் மூலம் கடப்பது=பக்தி நெறி.

No comments:

Post a Comment