துன்ப மெலாம் தொலைத் தோட்டும் பதம்!
...துட்டருக்கும் துணை செய்யும் பதம்!
இன்ப மெலாம் இசைந்தளிக்கும் பதம்!
...இறைவனாம் ராம கிருஷ்ண பதம்!....6.
தட்சி நேஸ்வரத்தில் தழைத்த பதம்!
...தருமப் பயிரை வளர்த் திட்ட பதம்!
இச்சை யென்னும் இடரொழிக்கும் பதம்!
...ஈசனாம் ராம கிருஷ்ண பதம்!....7.
10 years ago
No comments:
Post a Comment