பாலை வனத்தில் நீர்காணல்
...பசித்தோன் சுவைக்கும் பழம்காணல்
சாலை வெயிலிற் களைத்திட்டோன்
...சுகந்தரும் மரத்தின் நிழற்காணல்
வேலை யிடையே அலைபட்டோன்
...ஓடம் காணல் இச்சுகங்கள்
காலைப் பிடித்துனை வேண்டிடுவோர்
...காண்பா ரையா ராமக்ருஷ்ணா!....33.
உன்னடி யாரோ டிணங்கிடவும்
...உறங்கி யவரோ டெழுந்திடவும்
பன்னரும் உன்புகழ் பேசிடவும்
...பாடியும் ஆடியும் பரவிடவும்
தன்னைம றந்தே கண்ணீராய்
...தழுதழுத் திடநா குழறவுமென்
முன்னைய வர்புனி தம்பெறவே
...மகிழ்வே னோநான் ராமக்ருஷ்ணா!....34.
முன்னையவர்= ancestors
12 years ago

No comments:
Post a Comment